மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோயிலில் வரும் 20-ஆம் தேதி சித்திரைத் திருவிழா தொடங்குகிறது. இதற்காக இப்பகுதி வைகையாற்றில் பேரூராட்சி நிர்வாகம் மூலம் சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருவிழாவுக்கு வரும் மக்கள் இரவு நேரங்களில் வைகையாற்றில் கூடுவர். மேலும், அங்கு திருவிழா கடைகள், பொழுதுபோக்கு அம்சங்களான ராட்டினங்கள் அமைக்கப்படும். வரும் 30-ஆம் தேதி வைகயாற்றில் அழகர் இறங்கும் வைபவம் நடைபெறுகிறது. சித்திரைத் திருவிழாவுடன் ஒன்றிப்போன மானாமதுரை பகுதி வைகையாறு திருவிழாவை முன்னிட்டு, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வைகை ஆற்றை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி, ஆற்றுக்குள் வளர்ந்திருந்த கருவேல மரங்கள், குப்பைகள் அகற்றப்பட்டு பள்ளங்கள் சீரமைக்கப்பட்டு வருகிறது.