மானாமதுரை பகுதியில் சனிக்கிழமை நள்ளிரவு இடியுடன் பலத்த மழை பெய்தது.
கடந்த சில நாள்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், சனிக்கிழமை காலை சாறல் மழை பெய்தது. பின்னர், நள்ளிரவு இடியுடன் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து, சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்தது. இந்த மழையால் மானாமதுரை பகுதியில் வெயிலின் தாக்கம் தணிந்துள்ளது.