சிவகங்கையில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திங்கள்கிழமை இரவு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் பி.குமார் தலைமை வகித்தார். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.குணசேகரன், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலர் எல்.ஆதிமூலம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
இதில்,உச்சநீதிமன்றத்தின் உத்தரவு படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் எனவும் , மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில்,தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.