காரைக்குடியில் வீறு கவியரசர் முடியரசனார் அவைக்களம் சார்பில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான கவியரசர் முடியரசனாரின் படைப்புகளிலிருந்து கவிதை, கட்டுரைப் போட்டிகள் ஆகஸ்ட் 19 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகின்றன.
மாணவர்களிடையே தமிழ்ப் பற்றை வளர்க்கும் விதமாக ஆண்டுதோறும் முடியசனாரின் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் இப்போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவியர், முடியரசனாரின் கவிதைப் படைப்புகள், காப்பியங்கள், கடித இலக்கியங்கள், கட்டுரைகள், இலக்கணம், சிறுகதை, தன்வரலாறு போன்றவை தமிழ் இணையப் பல்கலைக்கழக டமிள்வியு.ஆர்க் என்ற முகவரியில் அனைத்தையும் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து, அதனைப் படித்து போட்டியில் பங்கேற்கலாம். இது குறித்து மேலும் விவரங்களுக்கு, பேராசிரியர் சே. செந்தமிழ்ப்பாவை 94865-50725, முனைவர் தமிழ்முடியரசன் 98425-89571, முனைவர் இரா. வனிதா 94860-02268 ஆகியோரது எண்களில் ஏதாவதொன்றில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம். போட்டிக்கான ஏற்பாடுகளை, எழுத்தாளர் பாரி முடியரசன் மற்றும் அவைக்கள நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.