சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் ஆகஸ்ட் 21 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
இது குறித்து சிவகங்கை மாவட்ட மின் பகிர்மானத்தின் மேற்பார்வைப் பொறியாளர் மு. சின்னையன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பத்தூர் கோட்டத்துக்குள்பட்ட மின் பயனீட்டாளர்கள் பயன்பெறும் வகையில் செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. திருப்பத்தூரில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் துணை மின் நிலைய அலுவலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில், மின்சார வாரியம் தொடர்பான புகார்களை மனு மூலம் தெரிவிக்கலாம். அவை விசாரணை செய்யப்பட்டு உடனடியாகத் தீர்வு காணப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.