பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தவும் லோக் ஆயுக்த சட்டத்தை வலுப்படுத்தவும் கோரி சிவகங்கை மாவட்ட காந்திய மக்கள் இயக்கம் சார்பில் காரைக்குடி ஐந்துவிளக்குப்பகுதியில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்ற

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தவும் லோக் ஆயுக்த சட்டத்தை வலுப்படுத்தவும் கோரி சிவகங்கை மாவட்ட காந்திய மக்கள் இயக்கம் சார்பில் காரைக்குடி ஐந்துவிளக்குப்பகுதியில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தினந்தோறும் நிகழும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் மற்றும் வாகன விபத்துகள் போன்ற குற்றங்களை  தடுக்கவும் இதில் வலியுறுத்தப்பட்டது.
 சிவகங்கை மாவட்டம் சார்பில் காரைக்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்தலைவர் அ. அருளானந்து தலைமை வகித்தார். மாவட்டப் பொதுச்செயலாளர் கே. தங்கவேல்,  மாவட்டத் துணைத் தலைவர் எஸ். செந்தில்குமார், வடக்குப் பகுதி மாவட்டச்செயலர் ரா. அழகர் ஆகியோர் முன்னிலைவகித்தனர். 
ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் சி. கிருஷ்ணமூர்த்தி, மாநில கொள்ளகைபரப்புச்செயலாளர் பொன் மனோகரன் மற்றும் மாநில நிர்வாகிகள் சிறப்புரையாற்றினர். மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com