தென் மண்டல அளவில் நடைபெற்ற ஓட்டப்பந்தயப் போட்டியில் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஜாகீர் உசேன் கல்வியியல் கல்லூரி மாணவி முதலிடம் பெற்று பதக்கம் வென்றார்.
சென்னையில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் சார்பில் தென் மண்டல விளையாட்டுப் போட்டி கடந்த 10 ஆம் தேதி நடைபெற்றது. இதில் இளையான்குடி ஜாகீர் உசேன் கல்வியியல் கல்லூரி மாணவி கே.அனுசியா 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயப் போட்டியில் முதலிடம் பெற்று பதக்கம் வென்றார்.
மேலும் இவர் 2017-18 ஆம் ஆண்டுக்கான தனிநபர் வெற்றியாளருக்கான சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வென்றார். மாணவி அனுசியாவையும் இவருக்கு பயிற்சியளித்த கல்லூரி உடற்கல்வி இயக்குநர்
கோகுலன் ஆகியோரை கல்லூரி ஆட்சிக்குழு நிர்வாகிகள் மற்றும் முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டினர்.