சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகேயுள்ள மாமலை வனப்பகுதியில் புதன்கிழமை முயல் வேட்டைக்குச் சென்ற 6 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
புழுதிபட்டி மாயாண்டிபட்டியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் ராமு (40), அய்யாத்துரை மகன் குமார்(29), கருப்பையா மகன் அழகு (50), பழனி மகன் பூமிநாதன் (37), உத்தம்பட்டியைச் சேர்ந்த கருப்பையா மகன் சின்னையா (56), சின்னையா மகன் சிவசந்திரன்(32). இவர்கள் 6 பேரும் திருப்பத்தூர் அருகேயுள்ள மாமலை வனப்பகுதியில் முயல் வேட்டைக்குச் சென்றனராம். இது தொடர்பாக வனத்துறையினருக்கு வந்த தகவலையடுத்து வனச்சரக அலுவலர் மதிவாணன் தலைமையில் வனவர்கள் காசி, பழனி உள்ளிட்ட வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது 6 பேரும் பிடிபட்டனர். அவர்களை கைது செய்து, முயல் வேட்டைக்கு பயன்படுத்தும் எறி கம்புகள் கைப்பற்றப்பட்டு தலா ரூ. 5 ஆயிரம் வீதம் ரூ. 30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.