ஆசிரியர் வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ. 7 லட்சம் மோசடி: கணவர், மனைவி கைது

மானாமதுரையைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியருக்கு நிரந்தர ஆசிரியர் பணியிடம் பெற்றுத்தருவதாக ரூ.7 லட்சம் மோசடிசெய்த

மானாமதுரையைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியருக்கு நிரந்தர ஆசிரியர் பணியிடம் பெற்றுத்தருவதாக ரூ.7 லட்சம் மோசடிசெய்த வழக்கில் நெல்லையைச் சேர்ந்த  கணவர், மனைவியை சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்தவர் கேசவன்(45). இவர்,அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். 
  இவருக்கும், திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரி  அருகேயுள்ள கீழக்கட்டளையைச் சேர்ந்த லெனின்முருகானந்தம்(47) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.  இதையடுத்து, லெனின்முருகானந்தம், அவரது மனைவி பிரேமா(42), ஆகிய இருவரும் கடந்த 2016 ஆம் ஆண்டு கேசவனுக்கு அரசு உதவி பெறும் பள்ளியில் நிரந்தர ஆசிரியர் பணியிடம் வாங்கித் தருவதாக கூறி ரு.7 லட்சம் பணத்தைப் பெற்றுள்ளனராம். 
 ஆனால், வேலை வாங்கி தராததால் கேசவன் பணத்தை திருப்பிக் கேட்டதற்கு  லெனின்முருகானந்தம் உரிய பதிலளிக்கவில்லையாம்.   இதுகுறித்து சிவகங்கை மாவட்ட காவல்க் கண்காணிப்பாளர் டி.ஜெயச்சந்திரனிடம் கடந்த சில தினங்களுக்கு முன் கேசவன் புகார் தெரிவித்தார். 
  இதனையடுத்து, எஸ்பி உத்தரவின் பேரில் சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சுந்தரமாணிக்கம், சார்பு- ஆய்வாளர் அருள்மொழிவர்மன் ஆகியோர் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். 
 விசாரணையில் பணம் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, லெனின்முருகானந்தம்(47), பிரேமா(42) ஆகிய இருவரையும் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com