சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர்அருகே கல்குவாரி நீரில் மூழ்கி பள்ளி மாணவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
அழகாபுரியைச் சேர்ந்தவர் மாதவன் மகன் வாசுதேவன்(13). இவர் கிழச்சிவல்பட்டியில் உள்ள பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை பள்ளிக்கு விடுமுறை என்பதால் கீழச்சிவல்பட்டியில் உள்ள கல்குவாரியில் மீன்பிடிக்கச் சென்றார். அங்கு மீன் பிடித்த போது அவர் தவறி கல்குவாரியில் தவறி விழுந்து நீரில் மூழ்கினார். இரவு நீண்ட நேரமாகியும் வாசுதேவன் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் கல்குவாரிக்கு வந்து பார்த்த போது அவரது சைக்கிள் மட்டும் இருந்தது.
இதுகுறித்து கீழச்சிவல்பட்டி காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பின் போலீஸார் முன்னிலையில் கல்குவாரி நீரில் இருந்து வாசுதேவனின் சடலம் மீட்கப்பட்டது. இதுகுறித்து கீழச்சிவல்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.