திருப்பத்தூர் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரியில் நாட்டுநலப் பணித்திட்டமும், உலகமளாவிய இதய நிறைவு தியானப் பயிற்சி மையமும் இணைந்து சுவாமி விவேகானந்தரின் 155 ஆவது பிறந்ததின விழாவையொட்டி இளைஞர் எழுச்சி விழா எழுமின் என்ற தலைப்பில் கொண்டாடின.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவுக்கு கல்லூரி முதல்வர் சூசைமாணிக்கம் தலைமை வகித்து தொடக்கி வைத்தார். இதயநிறைவு தியானப்பயிற்சியாளர்கள் குமார், நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக நாகராஜன் வரவேற்றார். இவ்விழாவில் 750 மாணவர்கள் மற்றும் பேராசியர்களுக்கு இதயநிறைவு தியானப் பயிற்சியும், தனிமனித மேம்பாட்டுப் பயிற்சியும் அளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்கள் பி.ராஜேந்திரன், பி.நாராயணசாமி, இதயவர்மன் ஆகியோர் செய்திருந்தனர். பேராசிரியை தனலட்சுமி நன்றி கூறினார்.