தமிழ் ஆசிரியர்களுக்கு புதிய பாடநூல் பயிற்சி

திருப்பத்தூரில் தமிழ் ஆசிரியர்களுக்கான புதிய பாடநூல் பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூரில் தமிழ் ஆசிரியர்களுக்கான புதிய பாடநூல் பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
 முதன்மைக் கல்வி அலுவலர் குயின்எலிசபெத் உத்தரவின் பேரில் பாபா அமீர்பாதுஷா மெட்ரிக் பள்ளியிலும், ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் பள்ளியிலும் 2 கட்டங்களாக இப்பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியினை மாவட்டக் கல்வி அலுவலர் பரமதயாளன் தலைமை வகித்து தொடக்கி வைத்தார். உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர் திருஞானம் பயிற்சிக்கான ஆலோசனைகளை வழங்கினார். இப்பயிற்சியின் கருத்தாளர்களாக புகழேந்தி, ஈஸ்வரி, ராம்குமார், மாலதி மற்றும் அயோத்திக்கண்ணன், ராஜசேகரன், சரவணன் ஆகியோர் பங்கேற்றனர். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார கல்வி அலுவலர்கள் மூர்த்தி, சாந்தி, அடைக்கலராஜ், இந்திராணி, அருளானந்த், மாலதி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com