காரைக்குடி அருகே சாக்கவயல் (புதுவயல்) துணை மின்நிலையத்தில் வரும் புதன்கிழமை (ஜூலை 25) மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால் அன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அன்றைய தினம் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை, புதுவயல், கண்டனூர், மித்திராவயல், பெரியகோட்டை, சாக்கோட்டை, பீர்க்கலைக்காடு, வீரசேகரபுரம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின்விநியோகம் தடை செய்யப்படும் என்று காரைக்குடி கோட்ட செயற்பொறியாளர் பி. ஜான்சன் தெரிவித்துள்ளார்.