மானாமதுரை ஒன்றியம், கல்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில், குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு பள்ளியின் தலைமையாசிரியர் சேவியர் ஆரோக்கியதாஸ் தலைமை வகித்தார். சைல்டுலைன் இயக்குனர் வனராஜன் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்து பேசினார். இம்முகாமில், பாலியல் குற்றங்கள், குழந்தைத் திருமணம்,
ஆதரவற்ற குழந்தைகள், துயருறும் குழந்தைகள், காணாமல் போகும் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு
தேவைக்கு இலவச தொலைபேசி எண் 1098 இல் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.
மனிதம் அறக்கட்டளை நிர்வாக அலுவலர் தமிழ்செல்வி, சைல்டுலைன் அணித் தலைவர் ரவீந்திரகுமார், சைல்டுலைன் உறுப்பினர்கள் ராஜேஷ்குமார், சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.