சிவகங்கை மாவட்டத்தில் 15 சாரண, சாரணியர் ஆளுநர் விருதுக்கு தேர்வு

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சாரண, சாரணியர் இயக்கத்தைச் சேர்ந்த 15 மாணவ, மாணவியர் ஆளுநர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சாரண, சாரணியர் இயக்கத்தைச் சேர்ந்த 15 மாணவ, மாணவியர் ஆளுநர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து சிவகங்கை கல்வி மாவட்ட சாரண, சாரணியர் இயக்கத்தின் தலைவர் கண்ணப்பன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 
சாரண, சாரணியர் இயக்கத்தின் மூலம் ஆண்டுதோறும் சிறந்த மாணவ, மாணவிகளுக்கு ராஜ புரஷ்கார் விருது ஆளுநர் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
சிவகங்கை மாவட்டம் சோழபுரம் சுத்தானந்த பாரதி தேசிய வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த ரமணா, அகிலன், பொன் சந்தோஷ், ஒக்கூர் சோமசுந்தரம் செட்டியார் பள்ளியைச் சேர்ந்த பவித்ரன், ஆக்ஸ்வர்டு மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த ஹேமந்த், பிரவீன், அம்பரீசன், சிவகங்கை கே.ஆர்.மேனிலைப் பள்ளியைச் சேர்ந்த பிரியதர்சன் மற்றும் 21 ஆம் நூற்றாண்டுப் பள்ளியைச் சேர்ந்த கதிரேசன், கிருஷ்ணப்பிரகாஷ் ஆகிய 10  சாரணர்களும், நாட்டரசன்கோட்டை கேஎம்எஸ்சி பள்ளியைச் சேர்ந்த ரசிகா, சினேகா, பிரித்திகா மற்றும் ஆக்ஸ்வர்டு மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த அபிதா,ரேஷ்மாஸ்ரீ உள்பட 5 சாரணியர்களும் ஆளுநர் விருது பெற தகுதி பெற்றுள்ளனர்.
  இம்மாணவர்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி, மாவட்டக் கல்வி அலுவலர் (பொறுப்பு) சகீதா , சாரண சாரணியர் இயக்கச் செயலர் பொக்கிஷம், பொருளாளர் அருளாந்து ஆகியோர் பாராட்டினர் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com