திருக்கோஷ்டியூர் பிரதான சாலையை சீரமைக்கக் கோரிக்கை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகேயுள்ள செளமியநாராயண பெருமாள் கோயில் பிராதன சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகேயுள்ள செளமியநாராயண பெருமாள் கோயில் பிராதன சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் ஸ்ரீசெளமியநாராயண பெருமாள் கோயில். 
 இக்கோயிலின் சுற்றுச்சாலை மற்றும் பிரதான சாலை பிளவு ஏற்பட்டு கற்கள் பெயர்ந்தும் காட்சியளிக்கிறது. கோயிலின் நூறு அடிக்கும் முன் பெரம்பலூர் - மானாமதுரை தேசிய நெடுஞ்சாலை வளைந்து செல்வதினால் கோயிலின் பிரதான சாலையில் போக்குவரத்து குறைந்தது. 
இருப்பினும் மக்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதினாலும் மேலும் திருப்பத்தூர், பட்டமங்கலம், ஆகிய பகுதிகளுக்கு திருக்கோஷ்டியூர் கோயில் சாலை இணைப்புச் சாலையாக உள்ளது. 
திருக்கோஷ்டியூரிலிருந்து குண்டேந்தல்பட்டி, சோலுடையான்பட்டி, பிராமணப்பட்டி ஆகிய கிராமங்களுக்கு இச்சாலையைத் தான் பயன்படுத்த வேண்டும். மேலும் திருக்கோஷ்டியூர் சுகாதார நிலையம், காவல்நிலையம், ஆகிய பகுதிகளையும் இச்சாலை இணைக்கிறது. 
எனவே இச்சாலைப் பகுதியினை சரிசெய்தும், கோயில் வாயில் எதிரே உள்ள சாலையையும் செப்பனிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com