சிவகங்கை அருகே இளைஞர் கொலை: நண்பர் கைது

சிவகங்கை அருகே திங்கள்கிழமை இரவு இளைஞரைக் கொலை செய்த நண்பரை, மதகுபட்டி போலீஸார் செவ்வாய்க்கிழமை  கைது செய்தனர்.

சிவகங்கை அருகே திங்கள்கிழமை இரவு இளைஞரைக் கொலை செய்த நண்பரை, மதகுபட்டி போலீஸார் செவ்வாய்க்கிழமை  கைது செய்தனர்.
       மதுரை மாவட்டம், மேலூர் அருகே கோட்டநத்தம்பட்டியைச் சேர்ந்த கருப்பையா மகன் ராஜா (31). இவர், சிவகங்கை மாவட்டம் நகரம்பட்டியில் உள்ள ஒரு தோப்பில் பராமரிப்பு பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். அப்போது இவருக்கும், நகரம்பட்டியைச் சேர்ந்த சுப்பையா மகன் சுந்தரேஸ்வரன் (33) என்பவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது.    இதனிடையே, பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த சுந்தரேஸ்வரன் சில நாள்களுக்கு முன் நகரம்பட்டிக்கு வந்துள்ளார்.        இதையடுத்து, நகரம்பட்டியில் உள்ள சாலை அருகே ராஜாவும், சுந்தரேஸ்வரனும் திங்கள்கிழமை இரவு மது அருந்தி பேசிக் கொண்டிருந்தனராம். அப்போது, இருவருக்குமிடையே தகராறு முற்று கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அதில், ராஜா தான் அணிந்திருந்த கைலியால் சுந்தரேஸ்வரனின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இது குறித்த புகாரின்பேரில், மதகுபட்டி போலீஸார் வழக்குப் பதிந்து சுந்தரேஸ்வரனை செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com