மானாமதுரையில் குடிநீர் விநியோகம் பாதிப்பு

மானாமதுரை நகர் குடிநீர் திட்டம் ராஜகம்பீரம் வைகையாற்றுக்குள் செயல்பட்டு வருகிறது. மானாமதுரை பேரூராட்சி நிர்வாகம் மூலம் இக்குடிநீர் திட்டம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் குடிநீர்

மானாமதுரை நகர் குடிநீர் திட்டம் ராஜகம்பீரம் வைகையாற்றுக்குள் செயல்பட்டு வருகிறது. மானாமதுரை பேரூராட்சி நிர்வாகம் மூலம் இக்குடிநீர் திட்டம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் குடிநீர் திட்டத்துக்காக ராஜகம்பீரம் வைகையாற்று பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின் மாற்றியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் குடிநீர் திட்டத்துக்கான மின் விநியோகம் தடைபட்டது. இதன் காரணமாக குடிநீர் திட்டத்திலிருந்து நகரிலுள்ள மேல்நிலைத் தொட்டிகளுக்கு குடிநீர் ஏற்ற முடியவில்லை. அதனால் மானாமதுரை நகரில் சனிக்கிழமை காலை முதல் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது.
மின்வாரிய நிர்வாகத்தினர் குடிநீர் திட்டத்துக்கான எரிந்துபோன மின்மாற்றியை மாற்றி வேறு மின்மாற்றி பொருத்தினர். அதைத்தொடர்ந்து வைகையாற்றிலிருந்து குடிநீர் எடுத்து மேல்நிலைத்தொட்டிகளில் ஏற்றப்பட்டு வருகிறது. இதனிடையே திங்கள்கிழமை முதல் மானாமதுரை நகரில் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என பேரூராட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com