காரைக்குடியில் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து, நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் மாடு, குதிரை, நாய்கள் மற்றும் சில பகுதிகளில் பன்றிகளும் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக திரிகின்றன. இதனால், தேவையற்ற போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், அவ்வப்போது விபத்துக்களும் நிகழ்கின்றன.
எனவே, சாலைகளில் திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.