காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தேர்வுகள் இன்றும் ஒத்திவைப்பு

மழை, வெள்ளத்தின் காரணமாக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துறைகள் மற்றும் இணைப்புக் கல்லூரிகளுக்கு

மழை, வெள்ளத்தின் காரணமாக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துறைகள் மற்றும் இணைப்புக் கல்லூரிகளுக்கு சனிக்கிழமை (நவ. 17) நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து பல்கலைக் கழக பதிவாளர் ஹா.குருமல்லேஷ் பிரபு தெரிவித்திருப்பதாவது: கஜா புயலின் தாக்கம் சீரடையாத நிலையில் அழகப்பா பல்கலைக் கழகத்தில் உள்ள அனைத்துத் துறைகள் மற்றும் இணைப்புக் கல்லூரிகளுக்கு சனிக்கிழமை (நவ. 17) அன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இத்தேர்வுக்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அதில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com