சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதி மன்ற உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி சிவகங்கையில் ஐயப்பப் பக்தர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை அரண்மனை வாசல் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுசீராய்வு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.