சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள ராம் நகரில் உள்ள தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியின் பவள விழாவையொட்டி வெள்ளிக்கிழமை ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெற்றது.
இப்பள்ளியின் 75 ஆவது ஆண்டு பவள விழா அக்டோபர் 12,13,14 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாளான வெள்ளிக்கிழமை சிவகங்கை மறைமாவட்ட ஆயர் சூசை மாணிக்கம் தலைமையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெற்றது.
இதில் இயேசு சபை மதுரை மாநிலத் தலைவர் முனைவர் டெனிஸ் பொன்னையா, இயேசு சபை பள்ளி கல்வி ஒருங்கிணைப்பாளர் ஸ்டீபன் லூர்து
பிரகாசம், தேவகோட்டை வட்டார அதிபர் ஜோசப் கென்னடி, தாளாளர் லூர்துசாமி, தலைமையாசிரியர் ஆரோக்கியசாமி உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட பாதிரியார்களும் கன்னியாஸ்திரிகளும் கலந்துகொண்டனர்.
திருப்பலிக்கு பின் நடைபெற்ற தொடக்க விழாவில் தமிழ் ஆசிரியர் அன்பரசன் வரவேற்றார். ஆயர் சூசை மாணிக்கம் ஆசியுரை வழங்கினார். ஆசிரியர் ஆரோக்கிய ஈசாக் நன்றி கூறினார்.