கல்லூரி மாணவர்கள் கோயிலில் உழவாரப்பணி

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரி மாணவ, மாணவியர்கள்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரி மாணவ, மாணவியர்கள் சனிக்கிழமை ஆதிதிருத்தளிநாதர் கோயிலில் உழவாரப் பணிகளை மேற்கொண்டனர்.
திருப்பத்தூர் ஆதித்திருத்தளிநாதர் கோயில் வளாகத்தில் புதர்மண்டிய பகுதிகளை ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரி வணிகவியல்துறை 2 ஆம்  ஆண்டு மாணவ, மாணவியர் 130  பேர் இணைந்து அகற்றினர். மேலும்  மண்டபம் மற்றும் மேற்கோபுரத்தில் வளர்ந்துள்ள செடிகளை அகற்றினர். தூய்மைப்பணியில் பங்கு கொண்டோர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.  பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து துறைத்தலைவர் இரா.மாரியப்பன் நன்றி கூறினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com