திருப்பத்தூரில் அக்.24 -இல் மருதுபாண்டியர் குருபூஜை: ஆட்சியர் ஆய்வு

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மருதுபாண்டியர்களின் நினைவு நாளையொட்டி அக்.24 ஆம் தேதி நடைபெற உள்ள 217 ஆம் ஆண்டு குருபூஜைக்கான பணிகளை மாவட்ட ஆட்சியர் ஜெ. ஜெயகாந்தன் நேரில் ஆய்வு செய்தார். திருப்பத்தூ

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மருதுபாண்டியர்களின் நினைவு நாளையொட்டி அக்.24 ஆம் தேதி நடைபெற உள்ள 217 ஆம் ஆண்டு குருபூஜைக்கான பணிகளை மாவட்ட ஆட்சியர் ஜெ. ஜெயகாந்தன் நேரில் ஆய்வு செய்தார்.
திருப்பத்தூரில் மருதுபாண்டியர்களின் அரசு நினைவு மணிமண்டபத்தில் குருபூஜை மற்றும் அரசு விழாவிற்கான ஏற்பாடுகள் குறித்து அரசு அதிகாரிகள் மற்றும் மருதுபாண்டியர் வாரிசுதாரர்களிடமும் அவர் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் மருதுபாண்டியர் நினைவிடத்திலிருந்து செட்டியதெரு வழியாக பேருந்து நிலையம் செல்லும் சாலையை உடனடியாக புதிய தார்ச்சாலை அமைக்க உத்தரவிட்டார்.
தொடர்ந்து மருதுபாண்டியர் தூக்கிலிடப்பட்ட இடத்திற்கும் சென்று அரசு சார்பில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சிக்கான பணிகளை ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது காவல் ஆய்வாளர் கீதா, வட்டாட்சியர் தங்கமணி மற்றும் மருதுபாண்டியர் வாரிசுதாரர்கள் விஜயலெட்சுமி ராமசாமி, பாண்டியன், பார்த்தீபன், ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com