இளையான்குடி வாள்மேல் நடந்த அம்மன் கோயிலில் நடந்த நவராத்திரி விழா சனிக்கிழமை இரவு அம்புவிடும் நிகழ்ச்சியுடன் நிறைவடைந்தது.
இக் கோயிலில் நவராத்திரி விழா தொடங்கியது முதல் தினமும் வாள்மேல்நடந்த அம்மனுக்கு அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. விழாவின் நிறைவாக சனிக்கிழமை நடந்த அம்பு எய்தல் நிகழ்ச்சியின் போது குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி அம்பு எய்தினார். ஏராளமான பக்தர்கள் கோயில் முன்பு தீ மிதித்து வேண்டுதல் நிறைவேற்றினர்.