சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கீழச்சிவல்பட்டியில் ஐயப்ப பக்தர்கள் சபரிமலை பாரம்பரியத்தை காக்க வலியுறுத்தி சனிக்கிழமை சரண கோஷ பேரணி நடத்தினர்.
கீழச்சிவல்பட்டி பேருந்து நிலையம் அருகே ஐயப்பன் கோயில் குருசாமி லட்சுமணன் தலைமையில் கூடிய ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சபரிமலை பாரம்பரியம் காக்கப்பட வேண்டியும், சபரிமலை சன்னிதானப் பகுதிகளில் அமைதி நிலவ வேண்டியும் சரண கோஷ ஊர்வலம் சென்றனர். பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது.
இதில் பில்லமங்கலம், அழகாபுரி, விராமதி, முத்தூர்,கல்லாப்பேட்டை,இளையாத்தங்குடி, ஆவணிப்பட்டி கிராமங்களைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.