திருப்புவனத்தில் விவசாயிகள் சங்க பேரவைக் கூட்டம்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
இக்கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜெயராமன் தலைமை வகித்தார்.  
கூட்டத்தில், திருப்புவனம் ஒன்றியம் பழையனூர்- ஓடாத்தூர் இடைய கிருதுமால் நதியின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும். மடப்புரம் கண்மாய்க்கு தண்ணீர் வரும் கால்வாயை தூர்வார வேண்டும். திருப்புவனம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளதால் இங்கு போதிய மருத்துவர்கள் நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிர்வாகிகள் தேர்வு : தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்துக்கு திருப்புவனம் ஒன்றிய நிர்வாகிகளாக கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டவர்கள் விபரம். தலைவர்-நீலமேகம், செயலாளர்-சின்னக்கருப்பன், பொருளாளர்-பழனிவேல்.
கூட்டத்தில் மாநிலக் குழு உறுப்பினர் முத்துராமு, மாவட்ட நிர்வாகி வீரபாண்டி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com