திருப்புவனம் பகுதிகளில் அக்டோபர் 23 மின்தடை

திருப்புவனம் பகுதியில் செவ்வாய்க்கிழமை (அக்.23) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால்,

திருப்புவனம் பகுதியில் செவ்வாய்க்கிழமை (அக்.23) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், அப் பகுதியில் மின்சார விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சிவகங்கை மாவட்ட மின்பகிர்மான மேற்பார்வை பொறியாளர் மு.சின்னையன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம்,  நெல்முடிக்கரை, பூவந்தி, திருப்பாச்சேத்தி, கொந்தகை ஆகிய பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை (அக்.23) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் திருப்புவனம், தி.புதூர், லாடனேந்தல், தூதை,திருப்பாச்சேத்தி, மழவராயனேந்தல், மார்நாடு, குருந்தங்குளம், ஆனைக்குளம், முதுவன்திடல், பாப்பாங்குளம், பழையனூர், அழகுடையான், சங்கங்குளம்,பிரமனூர், வன்னிகோட்டை, வயல்சேரி, அல்லிநகரம், நைனார்பேட்டை, கலியாந்தூர், கொந்தகை, பாட்டம், பொட்டப்பாளையம், மணலூர், கீழடி, கழுகேர்கடை, தட்டான்குளம், மடப்புரம், பூவந்தி, கலுங்குபட்டி ஆகிய பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்லலில் இன்று(அக்.22) மின்தடை:  சிவகங்கை மாவட்டம் கல்லலில் உள்ள துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் கல்லல், தேவப்பட்டு, செவரக்கோட்டை, மருங்கிப்பட்டி, ஆலம்பட்டு, வெற்றியூர், சாத்தரசன்பட்டி, மாதவராயன் பட்டி, செம்பனூர், பாகனேரி, நடராஜபுரம், பனங்குடி, கெளரிப்பட்டி, அரண்மனை சிறுவயல், பொய்யாமணிப்பட்டி, சொக்கநாதபுரம்,கீழக்கோட்டை ஆகிய பகுதிகளிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com