தேனியில் வேலை நிறுத்தப் போராட்ட ஆலோசனைக் கூட்டம்

தேனியில், ஏப்ரல் 25 ஆம் தேதி நடைபெற உள்ள வேலை நிறுத்தப் போராட்ட முன்னேற்பாடுகள் குறித்து வெள்ளிக்கிழமை அனைத்துக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தேனியில், ஏப்ரல் 25 ஆம் தேதி நடைபெற உள்ள வேலை நிறுத்தப் போராட்ட முன்னேற்பாடுகள் குறித்து வெள்ளிக்கிழமை அனைத்துக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
 கூட்டத்துக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எம்.ஜெயக்குமார் தலைமை வகித்தார். முன்னாள் எம்.பி. பெ.செல்வேந்திரன், காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் முருகேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் டி.வெங்கடேசன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் பி.தங்கம், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலர்கள் நாகரத்தினம், ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 விவசாயிகளுக்கு ஆதரவாகவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், அனைத்து விவசாயிகளுக்கும் வறட்சி நிவாரணம் வழங்கவும் வலியுறுத்தி ஏப்ரல் 25-ஆம் தேதி அனைத்துக் கட்சிகள் சார்பில் நடைபெற உள்ள வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு வணிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் ஆதரவு கோருவது, வேலை நிறுத்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதுல் திராவிடர் கழகம், ஆதித்தமிழர் பேரவை, பெருந்தலைவர் மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com