அதிமுக அம்மா அணி மாவட்டச் செயல்வீரர்கள் கூட்டம்

தேனி- போடி சாலையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் சனிக்கிழமை அதிமுக அம்மா அணி மாவட்டச் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

தேனி- போடி சாலையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் சனிக்கிழமை அதிமுக அம்மா அணி மாவட்டச் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவர் நல்லவேலுச்சாமி தலைமை வகித்தார். பெரியகுளம் சட்டப் பேரவை உறுப்பினர் கே.கதிர்காமு முன்னிலை வகித்தார். இதில், மாவட்டச் செயலரும், ஆண்டிபட்டி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான தங்க.தமிழ்ச்செல்வன் பேசியதாவது: அதிமுக.வில் சசிகலா குடும்பம் மூலம் பல்வேறு பதவி சுகங்களை அனுபவித்து விட்டு, தற்போது அந்த குடும்பத்தை கட்சியில் இருந்து பிரித்து வைக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறுவது கடவுளுக்கு கூட பொறுக்காது. எனக்கு அமைச்சர் பதவி கிடைக்க விடாமல் தடுத்து வைத்திருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். அவர் தற்போது கூட கட்சியில் இணைந்து முதல்வர் பதவிக்கு கூட வரட்டும். ஆனால், தன்னை உருவாக்கியவர்களை உதாசீனப்படுத்தக் கூடாது.
அதிமுக தொண்டர்களை சந்திக்க துணைப் பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன் மாவட்டம் வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். அதன்படி மதுரை, மேலூரில் ஆக.14-ஆம் தேதியும், தேனியில் ஆக.29-ஆம் தேதியும் டி.டி.வி.தினகரன் பங்கேற்கும் பொதுக் கூட்டத்தில் கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com