தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய நூலகக் கட்டடம் புதன்கிழமை திறக்கப்பட்டது.
பள்ளித் தலைமை ஆசிரியர் ராஜா தலைமையில், புதிய நூலக கட்டடத்தை மாவட்ட நூலக அலுவலர் கார்த்திகேயன் திறந்து வைத்தார்.
புதிய நூலகத்தில் மாணவர்களுக்கான 10 ஆயிரம் பொது அறிவு மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான நூல்கள், ஆசிரியர்களுக்கான பயிற்சி மற்றும் வழிகாட்டி நூல்கள் இடம் பெற்றுள்ளன என்று பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் கோபிநாத் கூறினார்.