தேனி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநராக எஸ்.முகமது அப்துல்நசீர் வியாழக்கிழமை பொறுப்பேற்றார்.
இவர், தஞ்சை மாவட்டத்தில் ஆட்சியரின் நேர்முக உதவியாளராக (வேளாண்மை) பணியாற்றி, பணியிட மாறுதல் பெற்று தேனி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநராக பொறுப்பேற்றுள்ளார். தேனி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநராக பணியாற்றிய மூர்த்தி, சென்னை வேளாண்மைத் துறை கூடுதல் இயக்குநராக (விதைகள்) பதவி உயர்வு பெற்றுள்ளார். இவர், கோவை வேளாண்மை பல்கலை கழக விதை மற்றும் அங்கச்சான்று துறை இயக்குநராகவும் கூடுதல் பொறுப்பு வகிக்கிறார்.