பெரியகுளம் அருகே சில்வார்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் மகன் ஜெய் (8). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த இவர், கடந்த சில நாள்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் வியாழக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனையடுத்து சுகாதாரத்துறையினர் சில்வார்பட்டியில் முகாமிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.