ஆண்டிபட்டி அருகே மத்தியக் குழுவினர் ஆய்வு: கிராம மக்கள் முற்றுகை

ஆண்டிபட்டி அருகே தர்மத்துப்பட்டி கிராமத்துக்கு ஆய்வுக்கு வந்த மத்தியக் குழுவினரை, கிராம மக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.

ஆண்டிபட்டி அருகே தர்மத்துப்பட்டி கிராமத்துக்கு ஆய்வுக்கு வந்த மத்தியக் குழுவினரை, கிராம மக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.
ஆண்டிபட்டி அருகே புள்ளிமான்கோம்பை கிராமத்தை மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆர். பார்த்திபன் தத்தெடுத்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை செய்து வருகிறார். இப்பணிகளை ஆய்வு செய்ய மத்தியக் கண்காணிப்பு அலுவலர் டாக்டர் ஸ்ரீவத்ஸவா தலைமையிலான குழுவினர், புள்ளிமான்கோம்பை பகுதிக்கு வந்திருந்தனர். புள்ளிமான்கோம்பை ஊராட்சிக்குள்பட்ட தர்மத்துப்பட்டியில் ஆய்வு செய்தனர். அப்போது, அங்கு வந்த தெற்கு மூனாண்டிபட்டியைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கிராமத்துக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் எனக் கூறி, மத்தியக் குழுவினரை முற்றுகையிட்டனர்.
கிராம மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த அதிகாரிகள், அப்பகுதிக்குச் சென்று பார்வையிட்டனர். பின்னர், கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதையடுத்து, கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com