போடி அருகே வியாழக்கிழமை பகலில், வங்கி ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து திருடப்பட்டுள்ளது.
போடி அருகே சில்லமரத்துப்பட்டி தியாகராஜன் தெருவில் வசித்து வருபவர் ராமகிருஷ்ணன் (50), வங்கி ஊழியர். இவரது மனைவி ஜோதிமணி. ராமகிருஷ்ணன் பணிக்கு சென்று விட்ட நிலையில், ஜோதிமணி வீட்டைப் பூட்டிவிட்டு பொருள்கள் வாங்குவதற்காக போடிக்கு வந்துவிட்டாராம்.
பிற்பகலில் வீடு திரும்பிய ஜோதிமணி, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த 8 பவுன் தங்க நகைகள், ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியன திருடப்பட்டிருப்பதை அறிந்தார்.
இது குறித்து ஜோதமணி அளித்த புகாரின்பேரில், போடி புறநகர் காவல் நிலைய சார்பு- ஆய்வாளர் அப்துல் ரஹ்மான் மற்றும்
போலீஸார் வழக்குப் பதிந்து, திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.