உத்தமபாளையம் அருகே காமயகவுண்டன்பட்டியில் சனிக்கிழமை இரு சக்கர வாகனம் மின்கம்பத்தின் மீது மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
ஆண்டிபட்டி அடுத்துள்ள ஒத்தப்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் மனைவி பூங்கொடி(42). இவர், தனது உறவினருடன் சுருளித் தீர்த்தத்துக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். காமயகவுண்டன்பட்டி நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின்கம்பத்தில் மோதியதில், தூக்கி வீசப்பட்ட பூங்கொடி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து ராயப்பன்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.