தேனி தபால் நிலையத்தில் ரயில் பயண முன்பதிவு சேவை மையம்

தேனி தலைமை தபால் நிலையத்தில் ரயில் பயணச் சீட்டு முன்பதிவு சேவை மையத்தை, மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலம் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தார்.

தேனி தலைமை தபால் நிலையத்தில் ரயில் பயணச் சீட்டு முன்பதிவு சேவை மையத்தை, மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலம் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தார்.
    இந்த நிகழ்ச்சியில், அஞ்சல் துறை தென்மண்டல இயக்குநர் பவன்குமார் சிங், உதவி இயக்குநர் லட்சுமணன், ரயில்வே வணிக மேலாளர் செல்வராஜ், தேனி அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர் சுவாமிநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.    தேனி தபால் நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ள இச் சேவை மையத்தில், அனைத்து வேலை நாள்களிலும் ரயில் பயணத்துக்கு பொதுமக்கள் முன்பதிவு  செய்து பயணச் சீட்டு பெற்றுக் கொள்ளலாம் என்று ஆட்சியர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com