தேனி மாவட்டம் சின்னமனூரில் கோயில் மரத்தின் கிளைகளை வெட்டியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சின்னமனூர் காவல் நிலையம் அருகே சுமார் 100 ஆண்டுகள் பழமையான அரசமரத்துக்கு கீழே பிள்ளையார் கோயில் உள்ளது. இந்நிலையில், புதன் கிழமை அப்பகுதியை சேர்ந்த ஒருவர் அனுமதியின்றி மரத்தை சுற்றியுள்ள கிளைகள்அனைத்தையும் வெட்டி விட்டார். இதையடுத்து அவர் மீது எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.