பெரியகுளம் அருகே சாக்கடையில் தவறி விழுந்து சிறுவன் சாவு

பெரியகுளம் அருகே கழிவுநீர் காய்வாயில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்தான்.

பெரியகுளம் அருகே கழிவுநீர் காய்வாயில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்தான்.
 தாமரைக்குளத்தை சேர்ந்தவர் சுப்புராஜ். இவரது மகன் முத்துச்செல்வம் (3). இந்நிலையில் சிறுவன் முத்துச்செல்வம் சனிக்கிழமை காலை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது வீட்டின் அருகில் உள்ள கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்தான். இதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலே அவன் உயிரிழந்தான். இதுகுறித்து சுப்புராஜ், தென்கரை காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com