தேனி அருகே வீட்டுப் பூட்டை உடைத்து நகை திருட்டு

தேனி அருகே வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த நகை திருடு போனதாக ஞாயிற்றுக்கிழமை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தேனி அருகே வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த நகை திருடு போனதாக ஞாயிற்றுக்கிழமை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 கோடாங்கிபட்டி, நந்தவனம் தெருவைச் சேர்ந்தவர் ராஜூ மகன் சித்திரம் பிள்ளை. இவர், கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், கோடாங்கிபட்டியில் உள்ள சித்திரம் பிள்ளையின் வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து சித்தரம் பிள்ளையின் உறவினர் ஒருவர் அவருக்கு தகவல் தெரிவித்தார்.
 இதையடுத்து சித்திரம் பிள்ளை கோடாங்கிபட்டிக்கு வந்து பார்த்த போது, வீட்டு கதவின் பூட்டு மற்றும் அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, மூன்றே முக்கால் சவரன் எடையுள்ள தங்க நகை திருடு போயிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் ராஜேஷ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com