தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே அய்யனார்கோயில் பகுதியில் சுமார் 2 வயது மதிக்கத்தக்க பெண் கேளையாடு தண்ணீரைத் தேடி திங்கள்கிழமை காலை வந்துள்ளது. அப்போது அப்பகுதியில் சென்ற வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்தது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த கண்டமனூர் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கேளையாட்டின் சடலத்தைக் கைப்பற்றி கால்நடை மருத்துவர் உதவியுடன் உடற்கூறு ஆய்வு செய்து அப்பகுதியிலேயே புதைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிந்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.