கம்பத்தில் 8 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக ஞாயிற்றுக்கிழமை 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கம்பம், மின் வாரிய அலுவலகம் தெருவைச் சேர்ந்த பொன்னையா மகன் முனியாண்டி(56). கோம்பை சாலை பகுதியில் கம்பம் வடக்கு காவல் நிலைய போலீஸார் இவரைக் கைது செய்து 6 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர். அவருக்கு கஞ்சா விநியோகம் செய்ததாக கம்பம் கூழத்தேவர் தெருவைச் சேர்ந்த மகாராஜன் மனைவி ஈஸ்வரி மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே போல, கம்பம் குரங்குமாயன் தெருவில் கஞ்சா வைத்திருந்ததாக அதே பகுதியைச் சேர்ந்த கருத்தக்கண்ணன் மனைவி முத்துமாரி என்பவரையும் போலீஸார் கைது செய்து,இரண்டரை கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.