கார் மோதி விவசாயி சாவு

ஒட்டன்சத்திரம் அருகே கார் மோதியதில், விவசாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஒட்டன்சத்திரம் அருகே கார் மோதியதில், விவசாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள மண்டவாடி பழனிகவுண்டன் புதூரைச் சேர்ந்த விவசாயி கண்டிமுத்து(65). இவர் தனது இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை இரவு தாராபுரம்-ஒட்டன்சத்திரம் சாலை கள்ளிமந்தயம் பெட்ரோல் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே தாராபுரம் நோக்கிச் சென்ற கார் அவர் மீது மோதியதாம்.
 இதில் பலத்த காயமடைந்த கண்டிமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்து கள்ளிமந்தயம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கார் ஒட்டுநர் திருப்பூரைச் சேர்ந்த சிவக்குமாரை(42) கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com