பெரியகுளம் அருகே மூங்கிலணை காமாட்சியம்மன் கோயிலில் முடி காணிக்கைக்கு அதிக தொகை வசூலிப்பதாக பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இக்கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது, நெய் விளக்கு மற்றும் முடிகாணிக்கைக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் முடிகாணிக்கைக்காக ரூ. 20 கட்டணமாக கோயில் நிர்வாகம் வசூலிக்கிறது. அதன் பின் முடி எடுக்கும் நாவிதர்கள் ரூ.100 முதல் ரூ.200 வரை பெற்றுக் கொள்கின்றனர். இதுகுறித்து கோயில் நிர்வாகத்திடம் புகார் அளித்தால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
எனவே முடி காணிக்கைக்கு கோயில் நிர்வாகத்தினர் ஒரே கட்டணம் நிர்ணயம் செய்து வசூலிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கோயில் நிர்வாக அலுவலர் சந்திரசேகர் மற்றும் உதவி ஆணையர் சிவலிங்கத்திடம் தொடர்பு கொண்ட போது தொலைபேசி அழைப்பை எடுக்க வில்லை.