மதுரை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மார்ச் 28-இல் தொழில்பழகுநர் சேர்க்கை முகாம்

மதுரை அரசு தொழில்பயிற்சி நிலையத்தில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில், மார்ச் 28-ஆம் தேதி காலை 9 மணிக்கு தொழில்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெறுகிறது.

மதுரை அரசு தொழில்பயிற்சி நிலையத்தில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில், மார்ச் 28-ஆம் தேதி காலை 9 மணிக்கு தொழில்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து தேனி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: இம்முகாமில், 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று தொழில்பழகுநர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.6,500 முதல் ரூ.9,000 வரை உதவித் தொகை வழங்கப்படும். பயிற்சி நிறைவில் தேசிய தொழில்பழகுநர் சான்றிதழ் வழங்கப்படும்.
தேனி மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் தொழில்பயிற்சி நிலையங்கள் மற்றும் தொழில்பயிற்சிப் பள்ளிகளில் தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள், தொழில்பழகுநர் சேர்க்கை முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com