பெரியகுளம் அருகே அரசு தோட்டக் கலைக் கல்லூரியில் பணியாளர் மின்சாரம் தாக்கி பலியானார்.
பெரியகுளம் அரசு தோட்டக் கலைக் கல்லூரியில் பசுமைக் கூடாரம் அமைக்கும் பணி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் நடைபெற்று வருகிறது. ஒசூர் தளியை சேர்ந்த இம்ரான்(30) வியாழக்கிழமை காலையில் கூடாரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டார். கூடாரத்தின் மேல்பகுதியில் உயர்அழுத்த மின்கம்பி செல்கிறது. அதனை கவனிக்காமல் அவர் இரும்புக் கம்பியைத் தூக்கியபோது மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்துவிட்டார். இச்சம்பவம் குறித்து பெரியகுளம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.