தேனியில் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் வியாழக்கிழமை கோரிக்கையை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட 70 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தேனி, நகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகே தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி மாவட்டச் செயலர் எஸ்.ஆர்.சக்கரவர்த்தி தலைமையில், மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் உள்ள கள்ளர் சீர்மரபினரை, பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க அரசை வலியுறுத்தி அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட எஸ்.ஆர்.சக்கரவர்த்தி உள்ளிட்ட 70 பேரை தேனி காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.