தேனி அல்லிநகரம் நகராட்சி பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை இரவு மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதியதில், இளைஞர் உயிரிழந்தார்.
தேனி, கருவேல்நாயக்கன்பட்டி வள்ளுவர் காலனியைச் சேர்ந்தவர்கள் ஒச்சாத்தேவர் மகன் வசந்த் (20), ஜெகதீசன் மகன் காசி (19). இவர்கள் தேனி- பெரியகுளம் புறவழிச்சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது, நகராட்சி பேருந்து நிலைய நுழைவு வாயில் அருகே எதிரே பேருந்து நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து, மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில், மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற வசந்த் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவர் தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். உடன் சென்ற காசி காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து, தனியார் பேருந்து ஓட்டுநர் குமணந்தொழுவைச் சேர்ந்த பொன்னையா மகன் முருகன் (36) என்பவர் மீது தேனி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.