போடியில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

போடியில் புதன்கிழமை இரவு, விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போடியில் புதன்கிழமை இரவு, விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 இங்குள்ள திருவள்ளுவர் சிலை திடலில், மேற்கு வங்கத்தில் விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் மாணவர் அமைப்பினர் மீது தாக்குதல் நடத்திய காவல் துறையினரையும், அம்மாநில அரசையும் கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்க தாலுகா தலைவர் மூக்கையா தலைமை வகித்தார். விவசாய தொழிலாளர் சங்க தாலுகா செயலர் போஸ் முன்னிலை வகித்தார்.   ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் சங்க மாநிலக் குழு உறுப்பினர் கே.ராஜப்பன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தாலுகா செயலர் தங்கப்பாண்டி, சி.ஐ.டி.யூ. தாலுகா செயலர் சந்திரசேகர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலர் செல்வம் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com