உத்தமபாளையத்தில் வங்கி மீது கல்வீசி தாக்குதல்

உத்தமபாளையத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி மீது வெள்ளிக்கிழமை கல்வீசப்பட்டதில் முதியோர் உதவித் தொகை வாங்க வந்த மூதாட்டிக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

உத்தமபாளையத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி மீது வெள்ளிக்கிழமை கல்வீசப்பட்டதில் முதியோர் உதவித் தொகை வாங்க வந்த மூதாட்டிக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
 உத்தமபாளையத்தில் செயல்பட்டு வரும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளையில் உதவித் தொகை வாங்க வந்த முதியோர் அலைக்கழிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து அந்த வங்கிக்கு உதவித் தொகை வாங்க வந்த முதியோருக்கும், அதிகாரிகளுக்கிடையே வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. அப்போது உதவித் தொகை பெற திங்கள்கிழமை வரும்படி தெரிவிக்கப்பட்டதையடுத்து மர்ம நபர் ஒருவர் அந்த வங்கி மீது கற்களை வீசி தாக்கினார். அப்போது அங்கு நின்றிருந்த மூதாட்டி ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com